தமிழில் தோன்றிய தொன்மை இலக்கியங்களில் திருக்குறள், உலகப் பொதுமறையாய்க் கருதப்படுகிறது. உலகம் சார்ந்த தத்துவங்களை ஒன்றே முக்கால் அடிகளுக்குள்ளாக வைத்து எளிமையாய் தந்தவர் திருவள்ளுவர். உலகின் பல்வேறு மொழிகளில் திருக்குறளை மொழி பெயர்த்துள்ளனர் என்பதை உணரும்போது திருக்குறளின் சிறப்பை அறியலாம். இதனால், தமிழராய் பிறந்த ஒவ்வொருவரும் பெருமை கொள்ளலாம். என் கடமை என்கிறபோது இனி 1330 குறள்களையுமே தினம் ஒரு குறள் என்ற விகிதத்தில் இந்த பிளாகில் வெளியிட உள்ளேன். படித்து மகிழுங்கள்.
அறத்துப்பால்
குறள்: 1
"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு".
"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு".
பொருள்:
'அ'எனும் எழுத்து மற்ற எழுத்துக்களுக்கெல்லாம் முதன்மையாய் விளங்குதல் போல ஆதி பகவன் எனும் இறைவன் உலகில் வாழும் உயிர்களுக்கெல்லாம் முதன்மையாய் விளங்குகிறான்.
No comments:
Post a Comment