(ஸ்ரீ குரு தெட்சிணாமூர்த்தி சுவாமிகள்)
உலகில் மனிதர்களின் தீர்க்க இயலா வியாதிகளைத் தீர்க்கும் ஆலயங்கள் இந்தியாவில் நிறைய உண்டு. நமக்கு அவ்விடங்கள் அனைத்தும் தெரிய வாய்ப்புகள் குறைவே. தெய்வங்களிடம் பலவாறு வேண்டிடினும் இன்னும் தீரவில்லையே என்று வேதனைப்படுவோரும் உண்டு. அவ்வாறு தீர்க்க இயலா வியாதிகளையும் தீர்த்து, நியாயமான வேண்டுதல்களையும் நிறைவேற்றிக்கொள்ள நாம் நாட வேண்டிய இடம், ஏசு கிறிஸ்து, நபிகள் நாயகம், புத்தர், மகாவீரர், மற்றும் பலர் தங்கள் வாழ்வை இவ்வுலகிற்கே அர்ப்பணித்து இவ்வுலகம் மேன்மையுற பாடுபட்டு இவ்வுலகம் முழுமைக்கும் பெரும் துணையாய் நிற்கும் மகான்கள் வரிசையில் தமிழகத்திலும் கடந்த காலங்களில் ஆங்காங்கே அவதரித்து மனிதப் பிறவிகளின் துயர் நீக்கி தங்கள் வாழ்வை, வசதிகளைத் துறந்து, உலகியல் சுகங்களைத் துறந்து கடைசி வரை இறைவனின் உத்தரவை சிரமேற்கொண்டு வாழ்ந்து ஜீவன் முக்தர்களாக இன்றளவும் வாழ்ந்து சாமான்யரின் புறக்கண்களுக்கு அகப்படாத சித்தர்களாய் உலவிவருகின்றனர்.
அந்த வரிசையில், திருவாரூரில் மடப்புரம் எனும் பகுதியில் ஜீவன் முக்தி அடைந்து தம்மை நாடி வரும் பக்தர்களின் நியாயமான வேண்டுதல்களை எல்லாம் நிறைவேற்றும் நல்துணையாய் விளங்குதல் திருவாரூர் மற்றும் திருவாரூர் சார்ந்த பகுதிகளில் வாழும் மக்கள் அனைவரும் நன்கு அறிவர்.
பொதுவாக, ஜோதிடம் நன்கு அறிந்தவர்கள் சொல்லும் செய்தி இதுதான். ஒருவரின் ஜாதகத்தில் குரு பலம் சரிவர இல்லையெனில் அவரவர்களுக்கு வியாதி ஒரு பிரச்னையாக வரும். என்னதான் மருத்துவம் பார்த்தாலும் அவ்வளவு எளிதில் குணம் பெற முடியாது. எத்தை தின்றால் பித்தம் குணம் பெறும் என்றிருக்கிறது. அதற்குத்தான், பெரியோர், வாழும் காலத்தில் நல்லதைச் செய்யுங்கள், நன்றாய் வாழுங்கள், எவரையும் உடலால் மனதால் புண்படுத்தாதீர்கள், நம்பிக்கைத் துரோகம் செய்யாதீர்கள், மற்றவரை துன்புறுத்தாதீர்கள், அளவோடு பொய் பேசுங்கள், அளவோடு பொருள் சேருங்கள், மாற்றான் மனை நோக்காதீர்கள் என்றெல்லாம் நம் மூதாதையர் காலம்தொட்டு சொல்லிவந்தாலும் அதைக் கேட்டு வந்தோரின் சந்ததிகள் எல்லாம் என்னதான் வாழ்வில் சிரமங்கள் நேர்ந்தாலும் இறைவனின் துணைகொண்டு அச்சங்கடங்களை எல்லாம் தாண்டி நலமுடன் வாழ்தலும், தான்தோன்றித் தனமாய் எதற்கும் வளைந்து தராமல் தவறான செயல்களில் ஈடுபட்டோரின் சந்ததிகள் இன்றளவும் என்னதான் வாழ்வியல் வசதிகள் கொண்டிருந்தும் தீராத நோய்களால் துன்புற்றும், குழப்பமான பிரச்னைகளில் சிக்கித் துன்புற்றும், கவலைகளை கடன்வாங்கி அவதியுறுவதும் இக்காலம் முதல் நடந்துகொண்டுதான் இருக்கிறது.
நான் ஒன்றை பலமாகச் சொல்வேன். நமது பாட்டன், முப்பாட்டன் சேர்த்துவைத்த பொன், பொருள், நிலம், பணம் என அனுபவிக்கும் உரிமை கொண்டிருக்கிறோமோ, அதே போல அவர்கள் சேர்த்து வைத்த பாவ, புண்ணிய செயல்களுக்கும் நாமும் அனுபவித்தே ஆகவேண்டிய நிலையில் உள்ளோம். இந்த சொத்து என் முயற்சியில் சேர்த்தது அல்ல, எனவே இது எனக்கு வேண்டாம் என்று எவரேனும் சொல்வாரோ? அதே போல் தான் அனைத்தும். அந்தவகையில், இம்மாதிரி பாவச் செயல்களுக்கு நாம் பொறுப்பேற்க வேண்டிய சூழலில் தெய்வங்கள் கூட நம்மிடமிருந்து சற்று எட்டியே நிற்கும். ஆனாலும், நான் எப்படி பொறுப்பேற்க முடியும்? என்று கேட்டு நீங்கள் உண்மையிலேயே வருந்துவதாக இருப்பின் உங்களின் வேண்டுதலை இறைவனிடம் கொண்டு சேர்ப்பவர் தாம் சித்தர்களாய், ஜீவன் முக்தர்களாய் விளங்கும் இப்பெருமான்கள் ஆவர்.
பொதுவாக, ஜீவா சமாதிகளின் முன்பு உண்மை வேண்டுதலுடன் கண்ணீர் விட்டு, மனம் முழுமைக்கும் இறையருள் வேண்டி வணங்கினால் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது ஆன்மீகவாதிகளுக்கு நன்கு தெரிந்த ஒன்று. அந்த வகையில் திருவாரூர், மடப்புரத்தில் ஜீவன் முக்தராய் விளங்கும் ஸ்ரீ குரு தெட்சிணாமூர்த்தி சுவாமிகள் சன்னிதானம் சென்று அய்யாவை வணங்கி வாருங்கள். தீராத வியாதிகள் எவையும் தீரும் என்பது திண்ணம்.
இத்துணை சிறப்பு கொண்ட அய்யாவின் ஜீவசமாதி, திருவாரூர் நகரில், ஸ்ரீ தியாகராஜர் ஆலயத்தின் தெப்பக்குளத்தின் மேற்குப் பக்கமாக உள்ள மடப்புரத்தில் அமைந்துள்ளது. அய்யாவின் இயற்பெயர் அருணாச்சலம். சிதம்பரத்து ஆடல்வல்லான், நடராஜப் பெருமான், எல்லாம் வல்ல இறைவன் உலகத்தோர் மூலம் அய்யாவுக்கு அறிவித்த பெயர் தாம் "குரு தெட்சிணாமூர்த்தி". அய்யாவின் அருள் கருணைப் பெற்ற பக்தர்களுள் நானும் ஒருவன் என்ற முறையில் என் அன்பை சிறிய அளவிலாவது வெளிக்காட்டி, அய்யாவின் அருட்கருணையை பலரும் பெறவேண்டும் என்ற நோக்கில் இன்று வெளியிடும் வாய்ப்பு பெற்றேன்.
ஐயாவின் சன்னிதானத்தின் முன்புறமாக, அனைத்து சிவத்தலங்களிலும் உள்ளது போல நந்தியம்பெருமானின் சிலை ஐயாவை நோக்கும் விதமாக அமைந்துள்ளது.
மூலவர்:
(தொடர்ச்சி)
உலகில் மனிதர்களின் தீர்க்க இயலா வியாதிகளைத் தீர்க்கும் ஆலயங்கள் இந்தியாவில் நிறைய உண்டு. நமக்கு அவ்விடங்கள் அனைத்தும் தெரிய வாய்ப்புகள் குறைவே. தெய்வங்களிடம் பலவாறு வேண்டிடினும் இன்னும் தீரவில்லையே என்று வேதனைப்படுவோரும் உண்டு. அவ்வாறு தீர்க்க இயலா வியாதிகளையும் தீர்த்து, நியாயமான வேண்டுதல்களையும் நிறைவேற்றிக்கொள்ள நாம் நாட வேண்டிய இடம், ஏசு கிறிஸ்து, நபிகள் நாயகம், புத்தர், மகாவீரர், மற்றும் பலர் தங்கள் வாழ்வை இவ்வுலகிற்கே அர்ப்பணித்து இவ்வுலகம் மேன்மையுற பாடுபட்டு இவ்வுலகம் முழுமைக்கும் பெரும் துணையாய் நிற்கும் மகான்கள் வரிசையில் தமிழகத்திலும் கடந்த காலங்களில் ஆங்காங்கே அவதரித்து மனிதப் பிறவிகளின் துயர் நீக்கி தங்கள் வாழ்வை, வசதிகளைத் துறந்து, உலகியல் சுகங்களைத் துறந்து கடைசி வரை இறைவனின் உத்தரவை சிரமேற்கொண்டு வாழ்ந்து ஜீவன் முக்தர்களாக இன்றளவும் வாழ்ந்து சாமான்யரின் புறக்கண்களுக்கு அகப்படாத சித்தர்களாய் உலவிவருகின்றனர்.
அந்த வரிசையில், திருவாரூரில் மடப்புரம் எனும் பகுதியில் ஜீவன் முக்தி அடைந்து தம்மை நாடி வரும் பக்தர்களின் நியாயமான வேண்டுதல்களை எல்லாம் நிறைவேற்றும் நல்துணையாய் விளங்குதல் திருவாரூர் மற்றும் திருவாரூர் சார்ந்த பகுதிகளில் வாழும் மக்கள் அனைவரும் நன்கு அறிவர்.
பொதுவாக, ஜோதிடம் நன்கு அறிந்தவர்கள் சொல்லும் செய்தி இதுதான். ஒருவரின் ஜாதகத்தில் குரு பலம் சரிவர இல்லையெனில் அவரவர்களுக்கு வியாதி ஒரு பிரச்னையாக வரும். என்னதான் மருத்துவம் பார்த்தாலும் அவ்வளவு எளிதில் குணம் பெற முடியாது. எத்தை தின்றால் பித்தம் குணம் பெறும் என்றிருக்கிறது. அதற்குத்தான், பெரியோர், வாழும் காலத்தில் நல்லதைச் செய்யுங்கள், நன்றாய் வாழுங்கள், எவரையும் உடலால் மனதால் புண்படுத்தாதீர்கள், நம்பிக்கைத் துரோகம் செய்யாதீர்கள், மற்றவரை துன்புறுத்தாதீர்கள், அளவோடு பொய் பேசுங்கள், அளவோடு பொருள் சேருங்கள், மாற்றான் மனை நோக்காதீர்கள் என்றெல்லாம் நம் மூதாதையர் காலம்தொட்டு சொல்லிவந்தாலும் அதைக் கேட்டு வந்தோரின் சந்ததிகள் எல்லாம் என்னதான் வாழ்வில் சிரமங்கள் நேர்ந்தாலும் இறைவனின் துணைகொண்டு அச்சங்கடங்களை எல்லாம் தாண்டி நலமுடன் வாழ்தலும், தான்தோன்றித் தனமாய் எதற்கும் வளைந்து தராமல் தவறான செயல்களில் ஈடுபட்டோரின் சந்ததிகள் இன்றளவும் என்னதான் வாழ்வியல் வசதிகள் கொண்டிருந்தும் தீராத நோய்களால் துன்புற்றும், குழப்பமான பிரச்னைகளில் சிக்கித் துன்புற்றும், கவலைகளை கடன்வாங்கி அவதியுறுவதும் இக்காலம் முதல் நடந்துகொண்டுதான் இருக்கிறது.
நான் ஒன்றை பலமாகச் சொல்வேன். நமது பாட்டன், முப்பாட்டன் சேர்த்துவைத்த பொன், பொருள், நிலம், பணம் என அனுபவிக்கும் உரிமை கொண்டிருக்கிறோமோ, அதே போல அவர்கள் சேர்த்து வைத்த பாவ, புண்ணிய செயல்களுக்கும் நாமும் அனுபவித்தே ஆகவேண்டிய நிலையில் உள்ளோம். இந்த சொத்து என் முயற்சியில் சேர்த்தது அல்ல, எனவே இது எனக்கு வேண்டாம் என்று எவரேனும் சொல்வாரோ? அதே போல் தான் அனைத்தும். அந்தவகையில், இம்மாதிரி பாவச் செயல்களுக்கு நாம் பொறுப்பேற்க வேண்டிய சூழலில் தெய்வங்கள் கூட நம்மிடமிருந்து சற்று எட்டியே நிற்கும். ஆனாலும், நான் எப்படி பொறுப்பேற்க முடியும்? என்று கேட்டு நீங்கள் உண்மையிலேயே வருந்துவதாக இருப்பின் உங்களின் வேண்டுதலை இறைவனிடம் கொண்டு சேர்ப்பவர் தாம் சித்தர்களாய், ஜீவன் முக்தர்களாய் விளங்கும் இப்பெருமான்கள் ஆவர்.
பொதுவாக, ஜீவா சமாதிகளின் முன்பு உண்மை வேண்டுதலுடன் கண்ணீர் விட்டு, மனம் முழுமைக்கும் இறையருள் வேண்டி வணங்கினால் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது ஆன்மீகவாதிகளுக்கு நன்கு தெரிந்த ஒன்று. அந்த வகையில் திருவாரூர், மடப்புரத்தில் ஜீவன் முக்தராய் விளங்கும் ஸ்ரீ குரு தெட்சிணாமூர்த்தி சுவாமிகள் சன்னிதானம் சென்று அய்யாவை வணங்கி வாருங்கள். தீராத வியாதிகள் எவையும் தீரும் என்பது திண்ணம்.
இத்துணை சிறப்பு கொண்ட அய்யாவின் ஜீவசமாதி, திருவாரூர் நகரில், ஸ்ரீ தியாகராஜர் ஆலயத்தின் தெப்பக்குளத்தின் மேற்குப் பக்கமாக உள்ள மடப்புரத்தில் அமைந்துள்ளது. அய்யாவின் இயற்பெயர் அருணாச்சலம். சிதம்பரத்து ஆடல்வல்லான், நடராஜப் பெருமான், எல்லாம் வல்ல இறைவன் உலகத்தோர் மூலம் அய்யாவுக்கு அறிவித்த பெயர் தாம் "குரு தெட்சிணாமூர்த்தி". அய்யாவின் அருள் கருணைப் பெற்ற பக்தர்களுள் நானும் ஒருவன் என்ற முறையில் என் அன்பை சிறிய அளவிலாவது வெளிக்காட்டி, அய்யாவின் அருட்கருணையை பலரும் பெறவேண்டும் என்ற நோக்கில் இன்று வெளியிடும் வாய்ப்பு பெற்றேன்.
ஜீவசமாதி தெய்வங்கள்:
அய்யாவின் சமாதிக்கு வலது புறமாக விநாயகர் அமர்ந்த நிலையில் காட்சி அளிக்கின்றார்.
நந்தி:
ஐயாவின் சன்னிதானத்தின் முன்புறமாக, அனைத்து சிவத்தலங்களிலும் உள்ளது போல நந்தியம்பெருமானின் சிலை ஐயாவை நோக்கும் விதமாக அமைந்துள்ளது.
சன்னதியின் உட்புறமாக குரு தக்ஷிணாமூர்த்தி ஐயா அவர்கள் மூலவராக அருள் தோற்றம் கொண்டு ஜீவ சமாதி நிலையில் உள்ளார். ஒரு உண்மையை சொல்லியாக வேண்டும். சிறு வயது முதல் முருகப்பெருமான் மீது கொண்ட அன்பால், எல்லாம் வல்ல அவனின் அருளைப் பற்றி பேசினாலோ, எழுதினாலோ என் கண்கள் ஆனந்த கண்ணீரால் நிறைந்துவிடும். அதைப் போல், ஐயா சார்ந்த குறிப்புகளை இப்போது தரும்போது அதே நிலையில் உள்ளேன். இக்குறிப்புகளை வெறுமனே படிப்பவர்களாக அல்லாமல், ஐயாவின் அருளைப் பெறும் பொருட்டு இந்த பிளாகில் வெளியிடப்பட்டுள்ள படத்தினை பிரிண்ட் செய்து வணங்கி வாருங்கள். நீங்களே உணர்வீர்கள். உங்களின் வேண்டுதல்கள் நிறைவேறினால், திருவாரூர் சென்று, ஐயாவின் சன்னதியில் உங்களால் இயன்ற அளவில் அன்னதானம் செய்யுங்கள்.
(தொடர்ச்சி)