Tuesday, May 18, 2010

சாப்பிடுங்கள் வாழைப்பழம்! சாய்த்திடுங்கள் மனச்சோர்வை!

           


              தமிழகத்தைப் பொருத்தமட்டில் அனைத்து பழங்களிலும் முக்கனிகள் என்று சிலவற்றை சொல்வர். அவை: மா, பலா, வாழை. மாதாவால் ஊட்ட முடியாத உணவை மாங்காய் ஊட்டும் என்பதாக சொல்லும் வழக்கம். தமிழகத்தில் சமையலில் மாங்காய் ஒரு முக்கிய உணவுப்பொருளாக உள்ளது. வாழை என்று எடுத்துக்கொண்டால், வாழைக் காய் என்பதைவிட வாழைப்பழமே முக்கியத்துவம் பெறுகிறது. அந்த வகையில் வாழை பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள் என்பதைப் பார்ப்போம். 

           வாழைப்பழம், உடல்நலம் என்கிற பட்சத்தில் மிகச் சிறந்த உணவாகும். உடலில் சக்தியை அதிகரிக்கும் கார்போ ஹைட்ரேட்டுகள், வைட்டமின்கள் வாழைப்பழத்தில் அதிகம் உள்ளன. இயற்கையான நார்ச்சத்தும் பல வகையான உடலியல் பலன்களைத் தருகின்றன. 

             தோலின் வளர்ச்சிக்கும், கண்களின் திசுக்கள் வளர்ச்சிக்கும் உதவுகின்ற வைட்டமின் A வாழைப் பழத்தில் நிரம்பவே உள்ளது. மேலும், நரம்பு மண்டலத்தை அமைதியுறச் செய்யும்   வைட்டமின் B -யும் கூட வாழைப்பழத்தில் உள்ளது. 

                  மனித உடலில் நீர்ம அளவை பாதுகாக்கும், செல்களை பாதுகாக்கும்,  இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தக் கூடிய இயற்கையான பொட்டாசியம் வாழைப்பழத்தில் உள்ளது. 

                 வாழைப்பழத்தில்  உள்ள புரதம் நம் வயிற்றில் உள்ள பாக்டீரியாவை வெளியேற்றி வயிற்றில் உண்டாகும் அமிலத் தன்மையை குறைக்கிறது. 

                   வாழைப்பழத்தில் இரும்புச் சத்து மிக அதிகமாக உள்ளது. இது, நம் உடம்பில் உள்ள இரத்த அணுக்களின் செயல்பாட்டை துரிதப்படுத்துகிறது. அனீமியா எனும் இரத்த சோகை உள்ளவர்களுக்கு வாழைப்பழம் ஒரு சிறந்த மருத்துவ உணவாகும். 

                    வாழைப்பழத்தில் உள்ள அமினோ அமிலங்கள் (டிரிப்டோபான்), நமது உடலின் இயற்கையான வேதி மாற்றங்களின் மூலம் செரோடோனின்  எனும் பொருளாக மாற்றப்பட்டு அதன் மூலம், உடலுக்கு ஓய்வைத் தருகின்றன. 


    

No comments:

Post a Comment