Thursday, June 10, 2010

சித்த மருத்துவம் - டிப்ஸ்

உடம்பில் வியர்வை நாற்றமா? 
நீங்கள் குளிக்கும் போது நீர் உள்ள பாத்திரத்தில் ஒரு எலுமிச்சை பழத்தைப் பிழிந்து, ஒரு சிட்டிகை அளவு உப்பையும் கலந்து குளித்தால் வியர்வை நாற்றம் காணாமல் போய்விடும்.

கண்களைச் சுற்றி கருவட்டமா? 
வெள்ளரிக்காயை வட்டமாக வெட்டி கண்களின் மீது சில நிமிடங்கள் வைத்திருந்தால், கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கும். கண்களின் கீழ் படிந்துள்ள கருவட்டங்களும் சிறுகச் சிறுக மறைந்துபோகும்.

உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக வேண்டுமா? 
நீங்கள் உண்ணும் உணவில் ஒரு கோழி முட்டையை உணவில் சேர்த்துக் கொண்டால், உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகும்.

கண்கள் குளிர்ச்சி பெறவேண்டுமா?    
பசும் பாலை கொதிக்க வைத்து ரோஜா இதழ்களை அதில் போட்டு மூடிவிட வேண்டும். நன்கு அறிய பிறகு, பாலை வடிகட்டி, பஞ்சில் நனைத்து கண்களின் இமை மீது போடலாம். இவ்வாறு செய்வதால் கண்கள் குளிர்ச்சி பெறும். அதிக நேரம் கம்ப்யுட்டரில் பணி புரிபவர்கள் இதனால் பலன் பெறலாம்.

Saturday, June 5, 2010

திருடப்பட்ட இளம் பருவம்


                                       




நன்றி: ritemail.blogspot.com

மேற்காணும் காட்சிகள் நம் உள்ளத்தை உருக்குவதாக இருக்கிறது. நம் பிள்ளைகளுக்கு இம்மாதிரி சூழ்நிலை அமைந்துவிடக்கூடாது என்று, இக்காட்சிகளைப் பார்க்கும் ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளின் வளர்ப்பில், தங்கள் வாழ்க்கை முறைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமென்று எண்ணித்தான் இக்காட்சிகளை எனக்கு வந்த யாஹூ குரூப் இ-மெயிலில் இருந்து எடுத்து இங்கே கொடுத்துள்ளேன். பொதுவாக, பிள்ளைகளை வளர்ப்பது எப்படி என்று எங்கேயும் படிக்க தேவையில்லை. ஒரு தாய், தகப்பன் என்கிற பட்சத்தில் இரத்தம் சார்ந்த இயற்கையான பாசத்தையும், அன்பையும் உங்கள் பொருளாதார வசதிக்கேற்றவாறு சரிவர காண்பித்தாலே போதும் என்பது என் கருத்து.